![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/a.jpg?resize=708%2C464&ssl=1)
இந்த ஆண்டு 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைக்க எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை, மீள கட்டியெழுப்புவதற்கு தேவையான விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, 94,495 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன், அதில் 56,000 பேர் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.