இலங்கைசெய்திகள்

பொலநறுவை – மட்டக்களப்பு வீதியில் விபத்து!!

srilanka

பொலநறுவை – மட்டக்களப்பு வீதியில் முச்சக்கரவண்டி- டிப்பர் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்ததுடன் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற இவ்விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியும் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த பெண் பொலநறுவை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button