
புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தனது தலைமுடியை தானாமாக வழங்கி மொட்டை போட்டுள்ள புகைப்படத்தினை தனது முகநூலில் பகிர்ந்துள்ளார்.
தனது பிறந்த தினத்தை முன்னிட்டு இவ்வாறு புற்று நோயாளர்களுக்கு இயற்கையாக தலைமுடி தயாரித்து வழங்கும் நிறுவனம் ஒன்றிற்கு தனது தலைமுடியை தானமாக வழங்கியுள்ளதாகவும் புற்றுநோயாளர்களின் வலியைப் புரிந்து கொள்வோம் எனவும் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.