
பாலஸ்தீன இனப்படுகொலையை உடன் நிறுத்துமாறு கோரி இன்று(30) கொழும்பு கொம்பனித்தெரு டிமெல் சிறுவர் பூங்காவிற்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
.பாலஸ்தீனத்தினுடைய சுதந்திரத்தை வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டிற்கும் அதன் பிரதமர் நெதன்யாகுவிற்கும் எதிராகவும், அமெரிக்க நாட்டிற்கும் அதன் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராகவும் மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.