இலங்கைசெய்திகள்

கூரிய ஆயுதங்களால் தாக்கிக் ஆணொருவர் கொலை!

காலி – அக்மீமன காவல்துறை பிரிவுக்குட்பட்ட தல்கம்பொல பிரதேசத்தில் உள்ள வீதியொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக ஏற்பட்டுவந்த தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்கள் தற்போது பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் காலி, தல்கம்பொல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அக்மீமன காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button