இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் பாரிய விபத்து!

கிளிநொச்சி – பரந்தன் பகுதியில், இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில், படுமாயமடைந்த இருவரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பூநகரி வீதியில் இருந்து ஏ9 வீதிக்கு பயணித்த மோட்டார் சைக்கிள், ஏ9 வீதியில் பயணித்த டிப்பர் வாகனத்துடன் மோதியுள்ளது. இதன்போது, மோட்டார் சைக்கிளை விலத்த முற்பட்ட டிப்பரின் ஒரு பகுதி, மோட்டார் சைக்கிளின் கான்ரில் பகுதியில் கொழுவி இழுத்து செல்லப்பட்டது.

இதனால் ,மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். சம்பவத்தில் கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதியை சேர்ந்த தேனுயன் (வயது 20), பிலங்கர் (வயது 22) ஆகிய இளைஞர்களே,  விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணையை, கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button