இலங்கைசெய்திகள்

கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பரிதாப மரணம்!

யாழ். ஊர்காவற்றுறையில் சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளான்.

ஊர்காவற்றுறை – நாரந்தனை வடக்கில் நேற்று குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விஜயேந்திரன் ஆரணன் (வயது 4) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சிறுவனின் தந்தை தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த நிலையில், கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் காணாமல்போயுள்ளான். இதையடுத்து பெற்றோர் தேடிய நிலையில், சிறுவன் கிணற்றில் சடலமாகக் காணப்பட்டுள்ளான்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றறைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button