இலங்கைசெய்திகள்

இரண்டாம் கட்ட மனிதப்புதைகுழி அகழ்வு இன்று ஆரம்பம்!!

அரியாலை – செம்மணி சித்துபாத்தி மனிதப் புகைகுழியின் இரண்டாம் கடாட அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியாலை – சித்துப்பாத்தி மயானத்தில் கடந்த பெப்ரவரி மாதம் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அந்த அகழ்வுப்பணி இடம்பெற்ற நிவையில் 3 குழந்தைகளின் உடலங்கள் உட்பட 19 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன என யாழ்ப்பாணம் நீதிமன்றினால் அறிவிக்கப்பட்டது. இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளை நாற்பத்தைந்து நாட்களுக்கு முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அகழ்வுப் பணிக்கான நிதி ஒதுக்கீடு கிடைத்துள்ளதனால் இன்று வியாழக்கிழமை முதல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button