இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய (29.08.2024 – வியாழக் கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!

News

1.

 தமிழரசுக் கட்சி பற்றி விசம பிரசாரம் – சுமந்திரன் சாடல்!! 

இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நிதி அபிவிருத்தி பணிகளுக்கானது.  இதை வைத்து விசம பிரசாரம் செய்யப்படுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ.  சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

2.

திருகோணமலையில் பொது வேட்பாளருக்கான பணிமனை திறந்து வைப்பு!!

திருகோணமலை மாவட்டத்தில் பொதுவேட்பாளருக்கான பணிமனை நேற்று திறந்து வைக்கப்பட்டது. 

3.

பிரான்ஸில் யாழ். குடும்பஸ்தர் மீது தாக்குதல்!!

பிரான்ஸில் வசித்து வரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தமிழ் இளைஞர்களால்  சிலரால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

4.

யாழில் வர்த்தகருக்கு தண்டப்பணம் விதிப்பு!! 

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட கிருமி நாசினிகளை விற்பனை செய்த வர்த்தகருக்கு ஒன்றரை இலட்ச ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

5.

முன்னணியின் அறிவிப்பு!!

சமஷ்டி அரசியல் யாப்பை ஏற்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல் அறிக்கை வெளியிட்டால் தேர்தல் புறக்கணிப்பு என்கிற எமது நிலைப்பாட்டை பரிசீலனை செய்ய முடியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. 

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button