இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய (15.08.2024 – வியாழக்கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்கக் கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!

News

 1.

யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள பெண்ணின் சடலம் தொடர்பான அறிவிப்பு!!

யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பெண்ணொருவர் உயிரிழந்திருப்பதாகவும் சுயநினைவற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண்ணின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறும் வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா அறிவித்துள்ளார்.

2.

பரீட்சை வினாத்தாளில் வைத்தியர் அர்ச்சுனா!!

பாடசாலைகளில்   இரண்டாம் தவணைப்  பரீட்சை  இடம்பெற்ற நிலையில் குடியியல் பாடத்தில் கேட்கப்பட்ட கேள்விகளில் வைத்தியர்  அருச்சுனா தொடர்பில் வந்த வினாதாள் சமூகவலைத்தளங்களில்  வெளியாகியுள்ளது.  .

3.

ரணிலுக்கு ஆதரவளிக்கும் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ச குடும்ப உறுப்பினர் ஒருவர் ரணிலுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

4.

கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்!!

 இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் தினமான இன்று (15-08-2024) விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

5.

தமிழ் பொது வேட்பாளர் குறித்து வெளியான தகவல்!!

தமிழ் பொது வேட்பாளர் தேர்தலில் போட்டியிடுவார் எனவும் கடைசி நேரத்தில் பின்வாங்கமாட்டார் எனவும் புளொட் தலைவவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். 

செய்தியாளர் – சமர்க்கனி 

Related Articles

Leave a Reply

Back to top button