இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய (07.10.2024 – திங்கட்கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!

News

1.

சசிகலா ரவிராஜ் கட்சியிலிருந்து விலகல்!!

இலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து விலக, சசிகலா ரவிராஜ் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

2.

திருமலையில் கூட்டணியாகப் போட்டி!! 

வரவுள்ள தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக்கட்சியும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் திருகோணமலை மாவட்டத்தில் இணைந்து போட்டியிடவுள்ளன. 

3.

சஜித்துடன் இணையும் சந்திரகுமார் கட்சி!! 

எதிர்வரும் பொதுத்தேர்தலில் சந்திரகுமாரின் சமத்துவ கட்சி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடவுள்ளது. 

4.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி சட்ட முனைப்புடன் செயற்படுவார்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சட்டத்தின் முன் நிறுத்துவார் என்கிற நம்பிக்கை உள்ளதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். 

5.

தந்தை செல்வாவின் பேரனும் போட்டிக்களத்தில்!!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர்களான தந்தை செல்வா மற்றும் நாகநாதன் ஆகியோரின் பேரனான எஸ். சி. இளங்கோவனும் போட்டியிடவுள்ளார்.  

6.

தமிழரசுக் கட்சியில் இருந்து தவராசாவும் விலகல்!!

இலங்கை தமிழரசுக் கட்சியின் சகல  பொறுப்புகளிலும் இருந்து தாம் விலகுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி.  தவராசா அறிவித்துள்ளார். 

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button