இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய ( 05.09.2024 – வியாழக்கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!

News

 1.

பெங்களூரில் கைதான கிளிநொச்சி, யாழ்ப்பாண இளைஞர்கள்!!

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர்கள் மூவர் தங்கம் மற்றும் போதைப்பொருள் கடத்திய குற்றத்தில் இந்தியாவின் பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

2.

சைவதமிழர் சங்குக்கு வாக்களிக்க வேண்டும்!! 

ஒவ்வொரு சைவத்தமிழரும் சங்குச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனவும் விருப்பு வாக்குகளை அளிக்க வேண்டாம் எனவும் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார். 

3.

மிருசுவில் கொலை வழக்கு குற்றவாளி தொடர்பில் வெளியான தகவல்!!

யாழ்ப்பாணம் மிருசுவில் 8 பேர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மீதான அடிப்படை உரிமை மனுக்களை ஜனவரி 15 ஆம் திகதி பரிசீலிப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

4.

அரசாங்கத்தின் மீது பவ்ரல் அமைப்பு குற்றச்சாட்டு!!

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு என்று அரசாங்கம் மக்களைத் தவறாக வழிநடத்துகிறது என பவ்ரல் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. 

5.

மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரான தந்தை கைது – யாழில் சம்பவம்!! 

யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் 10 வயது மகளை பல நாட்களாக பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button