இலங்கைசெய்திகள்

இன்றைய பத்திரிகையில் (21.07.2024) முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள்!!

News

 1.

தேர்தல் வெற்றி எங்களுக்கே – ரணில்!!

சவாலான காலகட்டத்தில் பொருளாதாரத்தில் வெற்றி கண்டுள்ளோம். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி எங்களுக்கே என்பதில் சந்தேகமில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

2.

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் முக்கிய ஒப்பந்தம்!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் நாளை முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகிறது. 

3.

அர்ச்சுனாவிற்கு நன்றி கூறிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்!!

மாகாண நிர்வாகம் கூறுபவற்றை மாகாண நிர்வாகத்திற்கு உட்பட்ட அமைப்புக்கள் கேட்க வேண்டும் என்பதுடன் அதன் பிரகாரம் செயற்பட வேண்டும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

4. மீன்பிடிப் படகுகள் மாயம்!!

மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற 2 மீன்பிடி படகுகள் காணாமல் போயுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது.

5.

தேர்தல் தொடர்பில் சி. வி. விக்னேஸ்வரன் கருத்து!!

ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button