இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய பத்திரிகையில் (07.08.2024 – புதன்கிழமை) முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!

News

 1.

லண்டனில் வன்முறை ஆரம்பம்!!

லண்டனில் ஈழத்தமிழர்கள் அதிகமாக வாழும் இடங்களில் ஒன்றான ஹரோவில் வன்முறை தாக்குதலுக்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2.

இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு!!

இலங்கை – இந்திய பிரதிநிதிகள் சந்தித்து மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

3.

யாழில் இருந்து புதிய விமான சேவை!! 

சென்னை – யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவையை, செப்டமர் 1ம் திகதி முதல் தொடங்க உள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

4.

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு நீதி கோரி மன்னாரில் போராட்டம்!!

நீதி கேட்கச்  சென்றமைக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனின் விடுதலைக்கு நீதி கேட்டு இன்று காலை மன்னாரில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

5.

காணாமல் ஆக்கப்பட்டவர் சங்கத்தினரின் மாபெரும் போராட்டம்!!

சர்வதேச சமூகத்தின் தலையீட்டை வலியுறுத்தி எதிர் வரும் 30திகதி நடைபெறவுள்ள மாபெரும் போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் வேணாடுகோள் விடுத்துள்ளது. 

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button