இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!

1.
வடக்கு ஆளுநராக திரு. வேதநாயகன்?

வடக்கு மாகாண ஆளுநராக திரு. வேதநாயகன் அவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2.
இன்று ஜனாதிபதி உரை!!

இன்றைய தினம் இரவு 7.30 மணிக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

3.
இலங்கையில் காபந்து அரசு அமைந்தது!!

ஜனாதிபதி மற்றும் மூன்று அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை நேற்று அமைக்கப்பட்டது.

4.
ஐ. தே. கவுடன் சேர மாட்டேன் – சஜித் பிரேமதாச!!
ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களும் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருமனதாக என்னைப் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்துள்ளனர் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

5.
பாராளுமன்றம் கலைப்பு – நவம்பரில் பொதுத் தேர்தல்!!

செப்ரெம்பர் 25இல் இருந்து பாராளுமன்றத்தைக் கலைத்து நவம்பர் 21ம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டுவதாகவும் நவம்பர் 14 பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் எனவும் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button