இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!

News

 1.

வடக்கு – கிழக்கு இணைக்கப்படாது!!

பொதுஜன பெரமுனவின் ஆட்சியில் வடக்கு கிழக்கு இணைக்கப்படாது என அக்கட்சியின் வேடாபாளரான நாமல் ராஜபக்ச யாழில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் தெரிவித்துள்ளார். 

2.

அனுரவை கைது செய்யுமாறு முறைப்பாடு!!

யாழ்பாபாணத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, இனங்களுக்கு இடையே அமைதியின்மை ஏற்படும் வகையில் ஆற்றிய உரைக்காக அனுரகுமார நகஸிநாயகாகவை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

3.

சஜித்துக்கான ஆதரவில் மாற்றம் இல்லை!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் எந்த விதமான மாற்றமும் இல்லை என தமிழ் அரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் ப.  சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். 

4.

10 கோடி பெறுகிறது இலங்கை!!

இலங்ஙையின் வரவு – செலவு திட்டத்துக்கு ஆதரவாக இலங்கைக்கு 10கோடி கடனாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி சம்மதித்துள்ளது. 

5.

பிரதான வேட்பாளர்களுடன் பேச்சுக்கு போக மாட்டேன்  – தமிழ் பொது வேட்பாளர்!!

என்னை எந்தப் பிரதான கட்சியும் பேச்சுக்கு அழைக்கவில்லை எனவும் அழைத்தாலும் பேச்சுக்கு போக மாட்டேன் எனவும் பா.  அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். 

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button