இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இன்றைய பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள் ஒரே பார்வையில் சுருக்கமாக!!

News

 1.

இனப்பிரச்சனையைத் தீர்க்காமல் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது – ராஜித!! 

இலங்கையில் இனப்பிரச்சனை தீர்க்கப்படும் வரை இந்த நாட்டைக் கட்டியெழுப்பமுடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

2.

கொடுக்கல் வாங்கலாலேயே இந்த மாற்றம்!!

ஒரே இரவில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் காரணமாகவே பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்,  ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கக்கூடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 

3.

தலைவர் பிரபாகரன் குறித்து இந்தியா டுடே யின் சிரேஷ்ட ஊடகவியலாளர் வெளியிட்ட கருத்து!!

இந்தியா டுடேயின் சிரேஷ்ட ஊடகவியலாளர் ராஜ் செங்கப்பா விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து கருத்து தெரிவிக்கையில், 

தானே முதல் முதலில்  அவரைப் படம் பிடித்ததாகவும் அவரது மரணம் எவ்வாறு நிகழ்ந்து என்பதில் மர்மம் உள்ளதாகவும் கொழும்பில் நடைபெற்ற ஒன்று கூடலில் தெரிவித்துள்ளார். 

4.

வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு  ஏற்பாடு!!

உயிர் அச்சுறுத்தல் உள்ள ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. 

5.

ஊடகவியலாளர் மீது தாக்குதல்!!

வவுனியா மாவட்டத்தில் தனியார் பத்திரிகையொன்றில் பணியாற்றும் ஊடகவியலாளர் மீது தலைக்கவசம் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button