![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/07/IMG-20230720-WA0029-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)
புலம்பெயந்து சுவிசில் வசிக்கும் நேசதுரை அவர்கள் தமது தாயாரான மகாராஜா துரையம்மாவின் நினைவாக பெண் தலைமைத்துவ குடும்ப பெண்ணொருவருக்கு சுயதொழில் உதவியினை வழங்கியுள்ளார்.
இரண்டு பிள்ளைகளோடு மிகவும் வறுமை நிலையில் வாழ்ந்து வரும் குறித்த பெண், கால் ஒன்று பாதிக்கப்பட்ட நிலையில் நடக்க முடியாதிருப்பதால் வேலைக்கும் செல்ல முடியாத சூழலில் பெற்றோரோடு வாழ்ந்துவருகிறார்.
இவருக்கு சுயதொழில் முயற்சிக்காக ஆடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
தமது தாயாரின் நினைவு தினத்தில் இல்லாதோர்க்கு உதவிக்கரம் கொடுத்து மகிழும் நல்ல மனதினை உடைய புலம்பெயர் உறவிற்கு உதவி பெற்றுக்கொண்டவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2023/07/IMG-20230720-WA0027-1024x1024.jpg?resize=708%2C708&ssl=1)