இலங்கை

அமெரிக்கா பறக்க முன்’மொட்டு’ எம்.பிக்களுடன் பஸில் மந்திராலோசனை!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் நிதி அமைச்சருமான பஸில் ராஜபக்ச தலைமையில் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் முக்கிய கூட்டம் நேற்று நடைபெற்றது.

அலரி மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்கான வழிமுறைகள், சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா என்பன உட்பட மேலும் பல விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டன.

அதேவேளை, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று அதிகாலை அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டுள்ளார். இந்நிலையில், ஆளுங்கட்சி எம்.பிக்களுடன் அவர் நேற்று அவசரமாக ஆலோசனை நடத்தியுள்ளமை முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button