![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/11/10.jpeg?resize=350%2C329&ssl=1)
நெல் சாகுபடிக்கு தேவையான அனைத்து உரங்களையும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நவம்பர் 25 முதல் விவசாயிகளுக்கு வழங்க விவசாய அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
கமநல சேவை நிலையங்கள் ஊடாக விவசாயிகளுக்கு சேதன உரம், உயிர் திரவ உரம் மற்றும் நானோ நைட்ரஜன் உரங்களை விநியோகிப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை வகுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அமைச்சு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும் 100,000 லீற்றர் நானோ நைட்ரஜன் உரம் அடுத்த வாரம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.