Uncategorized

முல்லைத்தீவு கடலில் நீராடச் சென்றமூன்றாவது நபரின் சடலமும் மீட்பு!!

முல்லைத்தீவு கடலில் நீராடச் சென்று காணாமல்போயிருந்த இளைஞர்களில், மூன்றாவது நபரின் சடலமும் இன்று (6) மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு கடலில் நீராடியபோது, நீரில் மூழ்கி காணாமல்போயிருந்த மூன்று இளைஞர்களில் ஒருவரின் சடலம் நேற்றும் மற்றொருவரின் சடலம் இன்று காலையிலும் மீட்கப்பட்டன.

வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு கடலுக்கு சென்று நீராடிக்கொண்டிருந்த மூவர் நேற்று (5) மாலை திடீரென கடலில் மூழ்கினர். இதனையடுத்து காணாமல்போன இளைஞர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மதவுவைத்த குளத்தை சேர்ந்த மனோகரன் தனுஷன் (27), சிவலிங்கம் சகிலன் (26), தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரன் தர்சன் (26) ஆகியோரே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button