![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/PMD-27-740x417-1.jpg?resize=708%2C399&ssl=1)
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கமும் பொது மக்களும் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை இலங்கை பாராட்டுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதேவேளை பாகிஸ்தானில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாகிஸ்தான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.