கட்டுரை

உலக எழுத்தாளர்களின் எழுத்து மொழி!!

writer boorke

எழுத்தாளர் போர்ஹே

எழுத்தும், வாசிப்பும் வாழ்வதற்கான பிடிமானத்தை, வாழ்க்கைக்கான அர்த்தத்தை, நோக்கத்தை வழங்கக் கூடியவை. அவற்றைத் தனித்த ஒரு அனுபவமாகவே உலகளாவிய இலக்கியர்கள், எழுத்தாளர்கள் முன்வைக்கிறார்கள்.

எழுத்தாளர் போர்ஹே, புத்தகங்களைத் தனிப் பிரபஞ்சமாகவே பார்க்கிறார்; எழுத்துக்கு நிகரான ஒரு செயல்பாடாகவே வாசிப்பையும் அவர் முன்வைக்கிறார். இடாலோ கால்வினா மரணத்திலிருந்து தப்பிக்கும் முயற்சிதான் எழுத்து என்கிறார். சினுவா அச்சபே, உலகுக்கு நம்பிக்கை அளிப்பதையே எழுத்தாளனின் கடமையாகப் பார்க்கிறார். நபொகோவ் எழுத்தை மந்திரம் என்கிறார். புதிதாக எழுத வருபவர்களுக்கும் சரி, எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கும் சரி; தங்களுக்கென்று தனித்த ஓர் எழுத்துமுறையை உருவாக்கிக்கொள்ளும் வரையில், அதன் செயல்பாடு தொடர்பில் குழப்பமும், நம்பிக்கையின்மையும் ஏற்படுவது இயல்பு.

தற்போது உலகம் கொண்டாடும் எழுத்தாளர்கள் அந்தத் தத்தளிப்பை எதிர்கொள்ளாமலா இருந்திருப்பார்கள்? எழுதுவது குறித்து, எழுத்துச் செயல்பாடு குறித்து அவர்கள் என்ன சொல்கிறார்கள்? கேட்கலாம்!

Related Articles

Leave a Reply

Back to top button