இலங்கை

கொரோனாத் தொற்றால் மேலும் 27 பேர் மரணம்!

நாட்டில் மேலும் 27 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்துள்ளனர்.

நேற்று இவ்வாறு உயிரிழந்தவர்களில் 14 ஆண்களும், 13 பெண்களும் அடங்குகின்றனர்.

உயிரிழந்தவர்களில் 30 வயதுக்குக் குறைவான ஆண் ஒருவரும் உள்ளடங்குகின்றார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்று அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொரோனாத் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 641 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button