இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்

விலை அதிகரிப்பை வித்தியாசமாக எதிர்த்த சபை உறுப்பினர்! கரைச்சியில் சம்பவம்….

விலை அதிகரிப்பு எதிர்ப்பு தெரிவித்து சபை அமர்வில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா கலந்துகொண்டிருந்தார்.

விலை அதிகரித்து மக்களிற்கு சுமையை ஏற்படுத்தியுள்ள அத்தியாவசிய பொருட்களுடன் அவர் இன்று இடம்பெற்ற பிரதேச சபை அமர்வில் கலந்து கொண்டார்.

இதன்போது, சீமெந்து, பால்மா, மா, மஞ்சள், சமயல் எரிவாயு சிலிண்டர்களை உடலில் சுமந்தும், கழுத்தில் தூக்கு கயிற்றினை அணிந்தும் தனது எதிர்ப்பினை இன்று வெளியிட்டார்.

இதன் போது, மக்கள் பெரும் சுமைக்குள் தள்ளியுள்ளதாக அரசாங்கத்தினை சபையில் கடுமையாக விமர்சித்தார்.

இதன் போது பிரதேச சபை உறுப்பினரின் போராட்டம் நியாயமானது என பிரதேச சபை தவிசாளர் சபையில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button