![](https://i0.wp.com/www.ivinstamil.com/wp-content/uploads/2021/11/IMG-5b8fc2c7acac64728fdcfb5142fec1fd-V.jpg?w=708&ssl=1)
வவுனியாவில் – நெடுங்கேணி – ஊஞ்சால்கட்டி காட்டுப்பகுதியில் கடந்த வாரம் காயங்களுடன் யானை ஒன்று காணப்பட்டுள்ளது. அதனை அவதானித்த பொதுமக்க ளால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களினால் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
![](https://i0.wp.com/www.ivinstamil.com/wp-content/uploads/2021/11/IMG-ada5c6740e2f3912c1f80e822ce99f93-V.jpg?w=708&ssl=1)
எனினும் அந்த யானை உடம்பு மற்றும் காலில் ஏற்பட்ட வலி தாங்க முடியாமல் காட்டுக்கு செல்லாமல் மீண்டும் காட்டின் அருகே நான்கு நாட்களாக காணப்பட்டுள்ளது. இந்நிலையில் 7ம் திகதி வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களின் உதவியுடன் , வடக்கு மாகாணத்தின் கால்நடை வைத்தியர் கிரிதரன் குழுவினரால் சிகிச்சையளிக்கப்பட்டிருந்தது.
![](https://i0.wp.com/www.ivinstamil.com/wp-content/uploads/2021/11/IMG-5b8fc2c7acac64728fdcfb5142fec1fd-V-1.jpg?w=708&ssl=1)
கால், உடம்பில் காயம் ஏற்பட்டுள்ளதால் வைத்தியர் பல மணிநேர தீவிர வைத்திய சிகிச்சை மேற்கொண்டிருந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி மறுநாள் மரணமடைந்துள்ளது.
குறித்த யானை 20 வயது மதிக்கத்தக்க எட்டு அடி உயரமுடையதாக காணப்பட்டுள்ளது.