இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்துக்கு புதிய நகர்சேர் கடுகதி தொடருந்து சேவை!!

train

கல்கிஸையிலிருந்து காங்கேசன்துறைக்கு இன்று முதல் புதிய நகர்சேர் கடுகதி தொடருந்து சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமைகளில் கல்கிஸையில் இரவு 10 மணிக்கு புறப்படும் இந்தத் தொடருந்து, மறுநாள் அதிகாலை 5.25க்கு யாழ்ப்பாணத்தை சென்றடைந்து 5.30க்கு புறப்பட்டு காங்கேசந்துறையைச் சென்றடையும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் இந்தத் தொடருந்து காங்கேசன்துறையில் இருந்து இரவு 10 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்பட்டு தெஹிவளையைச் சென்றடையும்.

குறித்த தொடருந்திற்கான ஆசன முன்பதிவுகளை, யாழ்ப்பாணத் தொடருந்து நிலையத்திலும், ஏனைய ஆசன முன்பதிவுகள் செய்யக்கூடிய தொடருந்து நிலையங்களிலும் செய்யமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button