இலங்கைசெய்திகள்

டொலர் பிரச்சனையை ஒரு மாதத்திற்குள் தமிழ் தேசியக் கூட்டமைப்பால் தீர்த்து வைக்க முடியும் சாணக்கியன் அதிரடிப் பேச்சு

நாடு எதிர்நோக்கியுள்ள டொலர் பிரச்சனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் ஒரு மாதத்திற்குள் தீர்த்து வைக்க முடியுமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு நேற்று (12) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சனைக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் ஒரு மாதத்திற்குள் தீர்வு வழங்க முடியும் ஆனாலும், அரசாங்கத்திற்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்கும் சிந்தனை இல்லை.

ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பத்தை வழங்குமாறு எம்மால் ஒரு வருடத்திற்கு மேலாக கோரிக்கை விடுத்து வந்த போதிலும் அரசு அதனை கணக்கெடுக்கவில்லை.

எமக்கு சந்தர்ப்பத்தை வழங்கினால், நாட்டை கட்டியெழுப்பக் கூடிய யோசனைகளை எம்மால் முன்வைக்க முடியும்.
டொலர் பிரச்சினையைத் தீர்க்க ஒரு முறைமையை உருவாக்க முடியும். அரசாங்கம் தேர்தலுக்கு செல்லாது, இராணுவத்தினர் மற்றும் பிக்குமாரை பயன்படுத்தி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள முயற்சித்து வருகின்றதே தவிர நாட்டை முன்னேற்றுவதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை” என அவர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button