இலங்கைசெய்திகள்

கொரோனாவைவிட விலை உயர்வு பாதிப்பில்லை – ரஞ்சித் பண்டார!!

கொடிய கொரோனாவை கட்டுப்படுத்தியதைவிட சீனி சீமெந்து விலை அதிகரிப்பு பெரிய பாதிப்பு இல்லை என பெரமுன எம்.பி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சீமெந்துஇ சீனியின் விலை உயர்வைவிட கொரோனா வைரஸ் கொடியது என பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகவியாலாளருக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்இ

நாட்டில் அதிவேகமாக பரவி வந்த கொரோனாத் தொற்றை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாத்தமையால் 21 மில்லியன் மக்களும் அரசாங்கத்திற்கு நன்றி சொல்ல வேண்டுமெனவும்
ஆசிரியர் சம்பளப் பிரச்சினை, தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் சவாலுக்குள் பெரிய விடயமில்லை என்பதை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மக்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button