இலங்கைசெய்திகள்

பொலிஸ் உத்தியோகத்தர் அடித்துக் கொலை!

தென்மாகாணத்தில் இடம்பெற்ற குழு மோதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் தங்காலை, விதாரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அம்பாந்தோட்டை மாவட்டம், தங்காலைப் பகுதியில் குழு ஒன்று நடத்திய தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் சகோதரரும் தாக்குதலில் காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button