இலங்கைசெய்திகள்

புதையல் தோண்ட முற்பட்ட 6 பேர் மன்னாரில் கைது!

மன்னார், வங்காலை – பஸ்திபுரி பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மந்திரவாதி உள்ளடங்களாக 6 பேர் நேற்று மாலை வங்காலைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். அத்துடன் புதையல் தோண்டப் பயன்படுத்தும் ஒரு தொகுதி உபகரணங்களையும் பொலிஸார் மீட்டனர்.

வங்காலை – நானாட்டான் பிரதான வீதி, பஸ்திபுரி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் பின் பகுதியில் சிலர் புதையல் தோண்டுவதாக வங்காலைப் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற வங்காலைப் பொலிஸார் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 6 நபர்களைக் கைதுசெய்தனர்.

இவர்களில் கண்டியைச் சேர்ந்த சுமார் 50 வயதுடைய மந்திரவாதி ஒருவரும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.

ஏனைய நான்கு நபர்கள் வாங்காலையைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களில் ஒருவர் ஆசிரியர் எனவும் தெரியவருகின்றது.

மேலும், புதையல் தோண்டப் பயன்படுத்தும் ஒரு தொகுதி உபகரணங்கள் மற்றும் மந்திரம் சொல்வதற்குப் பயன்படுத்தும் ஒரு தொகுதி பொருட்களும் மீட்கப்பட்டன.

கைதுசெய்யப்பட்ட நபர்கள் வங்காலை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button