இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

ஆபாசப் பேச்சுக்களைத் தடுக்க புதிய சட்டம்

ஆபாசப் பேச்சுக்களைத் தடை செய்யும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

குறித்த புதிய சட்டம் அறிமுகப்படுத்துவதற்கு இணையாக தண்டனைச் சட்டக் கோவையின் 285, 286 மற்றும் 289(அ) உறுப்புரைகளை முடிவுறுத்துவதற்காக சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்ட மூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

குறித்த சட்ட மூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button