இலங்கைசெய்திகள்

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவேந்தல் நிகழ்வு!

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் முன்னாள் தலைவர் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவேந்தலும் நினைவுப் பேருரையும் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சுடர் ஏற்றப்பட்டு குமார் பொன்னம்பலத்தின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன், சட்டத்தரணிகளான சுகாஸ், காண்டீபன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

குமார் பொன்னம்பலம் 2000ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் திகதி கொழும்பு, வெள்ளவத்தை – இராமகிருஷ்ண வீதியில் இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button