இலங்கைசெய்திகள்

இளைஞர் மீது ரவுடிக்கும்பல் காட்டுமிராண்டித்தனம்

கிளிநொச்சி புளியம்பொக்கணைப் பகுதியில் இளைஞர் ஒருவர் 6 பேர் கொண்ட குழுவினரால் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று (23) புளியம்பொக்கணைச் சந்தியில் இடம்பெற்றுள்ளது.

கண்ணிவெடிப் பிரிவில் தொழில் புரிந்து வரும் குறித்த இளைஞர் அதிகாலை வேலைக்குச் சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் 28 வயதுடைய மோகனவதனன் என்பவரே வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் தர்மபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button