இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கீரிமலையில் கடற்படையினரால் மேற்கொள்ளப்படவிருந்த காணி அபகரிக்கப்பு முறியடிப்பு!
யாழ். கீரிமலை பகுதியில் கடற்படையினருக்கு காணி அளவிடும் நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களால் முறியடிக்கப்பட்டது.
காணி உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் கீரிமலை நகுலேஷ்வரம், ஜே/226 கிராம சேவகர் பிரிவில் காணிகளை சுவீகரிப்பதற்கான அளவீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திட்டம் ஒன்று நில அளவை திணைக்களத்தினால் திட்டமிடப்பட்டிருந்தது.
இருப்பினும் அங்கு ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து, காணி அளவீட்டு நடவடிக்கைகளை தற்காலிகமாக கைவிட்டுவிட்டு செல்வதாக கூறிவிட்டு நில அளவைத் திணைக்களம் அவ்விடத்தில் இருந்து சென்றது.
![Gallery](https://i0.wp.com/cdn.ibcstack.com/article/0d1e078f-5788-4e44-8cb0-7a65d8efc9b7/21-61812f60b1af9.webp?w=708&ssl=1)
![Gallery](https://i0.wp.com/cdn.ibcstack.com/article/816cd9bd-546f-4b03-b588-f6fe12aff9d4/21-61812f61034f2.webp?w=708&ssl=1)
![Gallery](https://i0.wp.com/cdn.ibcstack.com/article/751be29a-d5ed-4e47-8633-e67fca2f2512/21-61812f6119b8a.webp?w=708&ssl=1)