சினிமாசெய்திகள்

‘ஜெய்பீம்’ ஒஸ்கார் விருதுக்கான தகுதிப் பட்டியலில்!!

jai bhim

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் ‛ஜெய்பீம்’ படம் கடந்தாண்டு வெளியானது.

உண்மைக் கதையை மையமாக கொண்டு வெளிவந்த இந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது.

திரைப்படங்களுக்கான தரப்படுத்தல் குறித்து கணக்கிடும் ஐ.எம்.டி.பி தளத்தில் அதிக புள்ளிகளை பெற்று ‘ஷாஷங் ரிடெம்ப்ஷன்’ திரைப்படத்தை முந்தி ‘ஜெய்பீம்’ சாதனை படைத்தது.

அதேபோல், ஒஸ்கார் விருதுக்கு அடுத்த நிலையாக கருதப்படும் கோல்டன் க்ளோப் விருதுக்கான போட்டியில் ‘ஜெய் பீம்’ இடம்பெற்றது.

ஒஸ்கார் அகாடமியின் அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்தில் ஜெய் பீம் படத்தின் காட்சிகள் பதிவேற்றப்பட்டிருந்தன.

இந்நிலையில் ஒஸ்கார் விருதுக்கான தகுதிப் பட்டியலில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் இடம்பெற்றுள்ளது. பல்வேறு பிரிவுகளில் ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 276 திரைப்படங்களில் ‘ஜெய் பீம்’ திரைப்படமும் இணைந்துள்ளது.

ஒஸ்கார் விருது வழங்கல் நிகழ்வு எதிர்வரும் மார்ச் 27 ஆம் திகதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ளது.

கடந்த ஆண்டு ஒஸ்கார் விருதுக்கான தகுதிப் பட்டியலில் சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button