இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்முக்கிய செய்திகள்

யாழில் சமயத் தலைவர்கள் பலரும் கையெழுத்து!

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்கக் கோரி இடம்பெறும் கையெழுத்துப் போராட்ட மனுவில் சமயத் தலைவர்கள் பலரும் கையெழுத்திட்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் கடந்த 3ஆம் திகதி முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கையெழுத்துப் போராட்டம் தற்போது பல இடங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக யாழ். குடாநாட்டில் உள்ள சமயத் தலைவர்களும் இன்று கையெழுத்திட்டனர்.

அதற்கமைய நல்லை திருஞானசம்பந்த ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பராமாச்சார்ய சுவாமிகள், கத்தோலிக்க திருச்சபையின் யாழ். பேராயர் கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம், தென்னிந்திய திருச்சபையின் யாழ். பேராயர் கலாநிதி டானியல் தியாகராஜா, யாழ். மாவட்ட ஜமையத்துல் உலமா தலைவர் அல் ஹச் அப்துல் அஸீஸ் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button