இலங்கைசெய்திகள்

யாழில் பதைபதைக்கும் சம்பவம் காதலனை நம்பிச்சென்ற பெண் காதலனின் துணையுடன் நால்வரால் பலத்காரம்

காதலனை நம்பிச்சென்ற பெண் காதலன் உட்பட நால்வரால் பாலியல் பலத்காரம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ் மிகமோசமான சம்பவத்தில் நெல்லியடி கரவெட்டி மேற்கைச் சேர்ந்த 18 வயது யுவதியே பாதிப்புக்குள்ளாகி உள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணாலேயே நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தின் பிண்ணனி

குறித்த பெண்ணுக்கு வந்த மிஸ்கோல் அழைப்பின் மூலமே முகம் தெரியாத இருவரும் காதலித்து வந்ததாகவும், பிறகு சந்தித்து ஒருவரை ஒருவர் அறிமுகம் ஆகியுள்ளனர்.

இந்நிலையில், காதலனின் தாயாருடன் கதைக்க வேண்டும் என்று காதலன் அழைத்ததன் பிரகாரம் காதலி நேற்று (11) காலை பத்து மணியளவில் காதலனுடன் சென்றுள்ளார்.

காதலன் திக்கம் பகுதியிலுள்ள பற்றைப் பகுதிக்கு யுவதியை கொண்டு சென்று பாலியல் பலத்காரம் செய்ததன் பின்னர் நீர் அருந்திவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றதாக பாதிக்கப்பட்ட யுவதி பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் காதலனின் நண்பர்கள் மூவர் அவ்விடத்திற்கு வந்து கால்களையும், கைகளையும் வாயையும் பொத்தி பலத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட யுவதி பொலிஸ் முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற பகுதி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு மாற்ப்பட நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button