இலங்கைசெய்திகள்

தேசிய மரபுரிமைகள் அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் அமைச்சின் ஒன்றுகூடல்!!

தேசிய மரபுரிமைகள் அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சினால்இ மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் யாழ்.மாவட்ட கலைஞர்களுடனான கலந்துரையாடல் இன்றையதினம் (06.11.2021) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் தேசிய மரபுரிமைகள்இ அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ விதுர விக்ரமநாயக்க இ யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்இ பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும்இ யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் கலந்து கொண்டதோடு குறித்த அமைச்சின் செயலாளர் நிஷாந்தி ஜெயசிங்க தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மானதுங்கஇ மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்இஉதவி மாவட்டச் செயலாளர்இ கலாசார உத்தியோகத்தர்கள் மத குருமார்கள் பேராசிரியர்கள் கலைஞர்கள்இஎழுத்தாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
யாழ்.தர்மினி பத்மநாதன்.

Related Articles

Leave a Reply

Back to top button