இலங்கைசெய்திகள்

நிழல் உலக தாதா ‘அபா’ துப்பாக்கிச்சூட்டில் பலி!

பாதாளக்குழு உறுப்பினரான அபா என்றழைக்கப்படும் துலான் சமீர சம்பத், விசேட அதிரடி படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் பலியாகியுள்ளார்.

மொறட்டுவ − எகொடவுயன பகுதியில் வைத்தே நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிழல் உலக தாதாவை கைதுசெய்வதற்காகப் படையினர் சென்ற வேளை, சந்தேகநபர், விசேட அதிரடிப் படையினரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இதில் விசேட அதிரடிபடை அதிகாரி ஒருவர் காயமடைந்து பாணந்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சுற்றிவளைப்பில் மேலும் 6 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button