இலங்கை

10 ஆயிரத்தைத் தாண்டிய சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள்!

இலங்கையில் இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் நவம்பர் 31 ஆம் திகதி வரை சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 10 ஆயிரத்து 713 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் 1,632 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளமை வருத்தமளிக்கின்றது என்றும் அவர் கூறினார்.

இவர்களில் 6 முதல் 10 வயதுக்கிடைப்பட்ட 2 ஆயிரத்து 626 சிறுவர்களும் அடங்குகின்றனர் என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Back to top button