![](https://i0.wp.com/www.ivinstamil.com/wp-content/uploads/2021/11/b.jpg?w=708&ssl=1)
இலங்கையில் மேலுமொரு கொரோனா அலைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் வாய்ப்புள்ளதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் கொரோனா தொற்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில் போராட்டங்கள் மற்றும் அதிகளவில் மக்களின் ஒன்றுகூடல்களை அவதானிக்க முடிந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் இலங்கை மீண்டும் ஒரு கொரோனா தொற்றை சந்திக்க நேரிடும் என வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நாட்டில் 60 சதவீத மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளமையால் கொரோனா தொடரிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.