இலங்கை

200 தடவைகள் தோப்புக்கரணம்: விசாரிக்க மூவர் குழு நியமனம்! – வடக்கு கல்வித் திணைக்களம் அதிரடி

யாழ்., வடமராட்சி புற்றளை மகா வித்தியாலயத்தில் தரம் 6இல் பயிலும் மாணவர் ஒருவரைச் சித்திரப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் 200 தடவைகள் தோப்புக்கரணம் செய்யுமாறு சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து நடவடிக்கை எடுக்க மூவர் கொண்ட விசாரணைக் குழுவை வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் நியமித்துள்ளது.

மாணவன் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார் என்று செய்தி வெளியாகியிருந்தது.

எனினும், பெற்றோர் பாடசாலைக்குச் சென்றபோது மாணவனை தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்கு உட்படுத்துமாறு பாடசாலை அதிபர் கேட்டிருந்தார்

இந்தநிலையில், பாதிக்கப்பட்ட மாணவன் பருத்தித்துறை வைத்தியசாலையில் நேற்றுக் காலை 8 மணியளவில் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து மாணவன் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்க மூவர் கொண்ட குழுவை வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் நியமித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button