இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்
மலையகத்தில் இருந்து பிற மாகாணங்களுக்கான போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்
மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நேற்று அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதல் மாகாணங்களுக்கிடையில் பொது போக்குவரத்து சேவையும் ஆரம்பமானது.
இதன்படி மலையகத்திலுள்ள பிரதான நகரங்களில் இருந்து கொழும்பு உட்பட இதர பகுதிகளுக்கான பேருந்து சேவை இடம்பெற்றது.
நுவரெலியா – கொழும்பு, பதுளை – கொழும்பு, கம்பளை – கொழும்பு, பூண்டுலோயா – கொழும்பு, கண்டி – பதுளை, ஹட்டன் – இரத்தினபுரி உட்பட மேலும் பல பேருந்து சேவைகள் இடம்பெற்றன.
சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பயணிகளை ஏற்றிச் செல்லும் நடைமுறையை தொடர்ந்து கடைபிடிக்குமாறு சுகாதாரத் தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர். சுகாதார நடைமுறையை மீறும் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
![Gallery](https://i0.wp.com/cdn.ibcstack.com/article/52c76743-bc8e-4be0-9219-68e3342cb87b/21-617f88f9b1c5b.webp?w=708&ssl=1)
![Gallery](https://i0.wp.com/cdn.ibcstack.com/article/dd48bbb8-2095-4027-b0c6-d9daeecb84a8/21-617f88fa2a168.webp?w=708&ssl=1)