இலங்கைசெய்திகள்

கிழக்கின் பிரதம செயலாளராக மீண்டும் துசித்த பி. வனிகசிங்க!

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக, துசித்த பி. வனிகசிங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடமிருந்து அவர் நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான துசித்த பி. வனிகசிங்க, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் செயலாளராகக் கடமையாற்றியுள்ளதுடன், அரச நிறுவனங்கள் பலவற்றிலும் பல்வேறு பதவி நிலைகளை வகித்தவராவார்.

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், கிழக்கு மாகாண பிரதம செயலாளராக அவர் பதவியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button