இலங்கைசெய்திகள்

கனகராயன்குளத்தில் காருடன் பஸ் மோதுண்டு விபத்து! – 5 பேர் காயம்

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் இன்று மதியம் காருடன் இ.போ.ச. பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கார் கனகராயன்குளம் பகுதியில் வீதியின் எதிர்த் திசைக்கு திரும்ப முற்பட்டுள்ளது.

இதன்போது அதே பாதையில் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் காருடன் மோதி விபத்துக்குள்ளானதுடன் பஸ் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து பாதையை விட்டு விலகி அருகேயிருந்த ஓர் காணியினுள் புகுந்தது.

இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button