இலங்கைசெய்திகள்

அரசாங்கம் சிறுபான்மைக் கட்சிகளுடன் விரைவில் சந்திக்க ஏற்பாடு!!

Ali Sabri

சிறுபான்மைக் கட்சிகளை சந்தித்து அரசாங்கம் விரைவில் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த கலந்துரையாடலில்,  தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய வடக்கு – கிழக்கு கட்சிகளுக்கும், முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது.

தற்போது நிலவும் அரசியல் பிரச்சினைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் குறித்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்படுவதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button