![](https://i0.wp.com/www.ivinstamil.com/wp-content/uploads/2021/11/tttttt-1.jpg?w=708&ssl=1)
பாரவூர்தி, எதிரே வந்த வேன் மற்றும் வீதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி பஸ்யால – கிரியுல்ல வீதியின் தன்சலேவத்த பகுதியில் பாரிய விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள், மதியகனே பகுதியைச் சேர்ந்த சந்தன பெரேரா( 47) மற்றும் மானெல் பத்திரன (42) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.