இலங்கைசெய்திகள்

இந்திய அதிகாரி மீது தாக்குதல் – தூதரகத்தின் அறிவிப்பு!!

Attack

நேற்று இரவு இந்திய விசா மையத்தின் அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தூதரக அதிகாரிகள் அவரை நேரில் சென்று நலம் விசாரித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்வீட்டில்,

“இந்திய விசா மையத்தின் இயக்குநரான அதிகாரி விவேக் வர்மா தாக்கப்பட்டு படுகாயமடைந்தார். அவரை மற்ற அதிகாரிகள் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தனர். இலங்கையில் உள்ள இந்தியர்கள் நிலவரத்தை புரிந்து கொள்ள வேண்டும். நாட்டைவிட்டு வெளியேற விரும்புபவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்” எனக் கூறியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button