![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/ranil-wickremesinghe-1541850225.jpg?resize=600%2C450&ssl=1)
நாட்டின் பதில் ஜனாதிபதியாக ரணில்விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க செயற்படுவார் என ஜனாதிபதி கோட்டபாயராஜ பக்ச அறிவித்துள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி வெளிநாட்டில் இருப்பதால் இலங்கை அரசியலமைப்பின் 37 (01) சரத்தின் அடிப்படையில் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
கோட்டபாய மற்றும் ரணில் விக்கிரமிசிங்க ஆகியோரை பதவி விலகுமாறு மக்கள் எழுச்சி போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், ரணில் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.